Search

Hi, guest ! welcome to CineClouds.com. | About Us | Contact | Register | Sign In

Sunday, October 14, 2012

மும்பையில் குடியேறுகிறார் சிம்ரன்


வருடக்கணக்காக காத்திருந்தும் பட வாய்ப்புகள் வராததால் மும்பையில் குடியேற முடிவு செய்துள்ளார் சிம்ரன்.
கமல், விஜய், அஜீத் என முன்னணி நடிகர்களுடன் நடித்தவர் சிம்ரன். இவர் கடந்த சில ஆண்டுகளுக்கு முன் தீபக் பகா என்பவரை திருமணம் செய்து கொண்டார்.

திருமணத்திற்கு பிறகும் மும்பையிலேயே வசித்து வந்தார். அதன் பின் கொலிவுட் படங்களில் நடிக்கலாம் என்ற எண்ணத்துடன் வந்த சிம்ரன், வாரணம் ஆயிரம், ஐந்தாம் படை போன்ற படங்களில் நடித்தார்.

இதனையடுத்து ஒரு சில படங்களில் அக்கா, அண்ணி வேடங்கள் வந்த போதும் நடிக்க மறுத்து விட்டார்.

கதாநாயகி வேடத்தில் அல்லது கதாநாயகிக்கு இணையான வேடத்திலேயே நடிக்க விரும்புவதாக தெரிவித்த அவருக்கு, பட வாய்ப்புகள் வராததால் விரக்தி அடைந்தார்.

இனிமேல் காத்திருப்பது வீண் என முடிவு செய்து, மும்பையிலேயே செட்டிலாக முடிவு செய்துள்ளாராம்.

0 comments:

Post a Comment