Search

Hi, guest ! welcome to CineClouds.com. | About Us | Contact | Register | Sign In

Saturday, October 27, 2012

சென்னை விமான நிலையத்தில் பத்திரிகையாளர்களுடன் விஜயகாந்த் மோதல்


தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் இன்று மதுரை செல்வதற்காக சென்னை விமான நிலையத்திற்கு வந்தார். அப்போது பத்திரிகையாளர்கள் அவரை பேட்டி காண்பதற்காக அருகில் சென்றனர். அவர்கள் தே.மு.தி.க. எம்.எல்.ஏ.க்கள் 2 பேர் நேற்று முதலமைச்சர் ஜெயலலிதாவை சந்தித்தது குறித்து கேள்வி கேட்டனர். 

அதற்கு பதில் அளித்த விஜயகாந்த், இதை அங்கு போய் கேளுங்கள். தமிழ்நாட்டில் மின்சாரம் இல்லை, டெங்கு காய்ச்சல் பரவுகிறது இதெல்லாம் உங்களுக்கு தெரிவில்லையா என்றார். 

மீண்டும் பத்திரிகையாளர் தே.மு.தி.க. எம்.எல்.ஏ.க்கள் ஜெயலலிதாவை சந்தித்ததை குறித்து கேள்வி எழுப்பினார்கள். இதனால் ஆவேசம் அடைந்த விஜயகாந்த் பத்திரிக்கையாளர்களிடம் ஒருமையில் ஆவேசமாக பேசினார். அருகில் இருந்த அவரது மனைவி பிரேமலதா விஜயகாந்த்தை சமாதானப்படுத்தினார். பின்னர் அவர்கள் விமானத்தில் மதுரை புறப்பட்டுச் சென்றனர்.

Source :http://www.maalaimalar.com/2012/10/27115615/vijayakanth-news-reporter-figh.html

0 comments:

Post a Comment